மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தோழர் என். சங்கரய்யா அவர்களின் மறைவு அதிர்ச்சியும் பெரும் துயரமும் அளிக்கிறது.
ஆங்கிலேய ஏகாதிபத்தி யத்திற்கு எதிராக போராட்டம், சுதந்திர இந்தியாவில் ஆளும் வர்க்கத்தை எதிர்த்து எண்ணற்ற போராட்டங்கள். சட்டமன்ற பணி கள், இலக்கியம், எழுத்து, மொழி உரிமை என பன்முகத் தளத்தில், பலருக்கு அனுபவ பாடமாக விளங்கி யவர் தோழர் சங்கரய்யா அவர்கள். நேதாஜி சுபாஸ் சந்திர போசை அழைத்து வந்து மாணவர்கள் மத்தி யில் விடுதலைக்கான விதையை விதைத்த சங்கரய்யா அவர்கள், அதற்கு பரிசாக பெற்றது, பி.ஏ., இறுதித் தேர்வுக்கு 15 நாட்கள் முன்பாக சிறைவாசம். 18 மாதங் கள் சிறையில் இருந்துவிட்டு சீற்றங்குறையாத சிங்கமாய், ஆங்கி லேயருக்கு எதிராக கர்ஜித்தபோது மீண்டும் சிறையில் தள்ளினார்கள். ஆனால் தமிழ்நாடே கொந்தளிக்க அதிர்ந்து போன ஆங்கிலேயர்கள் சங்கரய்யா அவர்களுக்கு விடுதலை கொடுத்தனர்.
அடிமை இந்தியாவில் ஆங்கிலே யர்களுக்கு எதிராக போராடியதால் 4 ஆண்டுகள், சுதந்திர இந்தியா வில் ஆளும் வர்க்கத்தை எதிர்த்து நின்றதால் 4 ஆண்டுகள் என தனது வாழ்நாளில் 8 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்தார். 4 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து மக்கள் பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்தார்.
80 ஆண்டுகளுக்கும் மேலான பொதுவாழ்வில் ஏராளமான சீர்த்திருத்த திருமணங்களை நடத்தி வைத்தவர் சங்கரய்யா, தன் குடும்பத்திலும் சாதி மறுப்புத் திரு மணங்களை நடத்தி முன்னுதார ணமாக இருந்துள்ளார்.
தமிழ்நாட்டின் பெருமை கீழடியை பாதுகாக்க வேண்டும் என்றும், மதச்சார்பின்மையைப் பாதுகாத்தல், இந்திய நாட்டின் ஒற்றுமை, மாணவர்கள், இளை ஞர்கள் தேசத்திற்காக குரல் கொடுக்க வேண்டும் என தனது இறுதி காலம் வரை வலியுறுத்தி வந்தவர் சங்கரய்யா அவர்கள்.
தமிழ்நாட்டின் உரிமைக்காக, எளிய மக்களின் குரலாக 80 ஆண்டு களுக்கும் மேலாக ஒலித்துக் கொண்டு இருந்த நிலையில் அவரது குரல் தற்போது மௌனிக் கப்பட்டு இருப்பது பெரும் துயரம் அளிக்கிறது.
தோழர் என். சங்கரய்யா அவர்களுக்கு, தமிழக வாழ்வுரி மைக் கட்சியின் சார்பில் இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, அவரை இழந்து வாடும் குடும்பத்தி னருக்கும், பொதுவுடமை தோழர்க ளுக்கும் ஆறுதலை கூறிக்கொள்கி றேன்.
தி.வேல்முருகன்,
தலைவர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி